சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
458 - கதித்துப் பொங்கலு (சிதம்பரம்) Songs from this thalam சிதம்பரம் 515 - பரமகுரு நாத
458 சிதம்பரம் திருப்புகழ் ( - வாரியார் # 626 )
கதித்துப் பொங்கலு
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான
கதித்துப்பொங் கலுக்கொத்துப்
பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்
கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின்
கழுத்தைப்பண் புறக்கட்டிச்
சிரித்துத்தொங் கலைப்பற்றிக்
கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர்
பதித்துத்தந் தனத்தொக்கப்
பிணித்துப்பண் புறக்கட்டிப்
பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப்
பறித்துப்பின் துரத்துச்சொற்
கபட்டுப்பெண் களுக்கிச்சைப்
பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ
கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்
கொதித்துச்சங் கரித்துப்பற்
கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக்
கழித்துப்பண் டமர்க்குச்செப்
பதத்தைத்தந் தளித்துக்கைக்
கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா
சிதைத்திட்டம் புரத்தைச்சொற்
கயத்தைச்சென் றுரித்துத்தற்
சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ்
செவிக்குச்செம் பொருட்கற்கப்
புகட்டிச்செம் பரத்திற்செய்த்
திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே.
Easy Version:
கதித்துப் பொங்கு அ(ல்)லுக்கு ஒத்துப் பணைத்துக் கொம்பு
எனத் தெற்றிக் கவித்துச் செம் பொ(ன்)னைத் துற்றுக்
குழலார்
பின் கழுத்தைப் பண்புறக் கட்டிச் சிரித்துத் தொங்கலைப்
பற்றிக் கலைத்துச் செம் குணத்தில் பித்து இடு மாதர் பதித்து
தம் தனத்து ஒக்கப் பிணித்துப் பண்புறக் கட்டிப் பசப்பிப்
பொன் தரப் பற்றிப் பொருள் மாளப் பறித்துப் பின் துரத்துச்
சொல் கபட்டுப் பெண்களுக்கு இச்சைப் பலித்துப் பின்
கசுத்திப் பட்டு உழல்வேனோ
கதித்துக் கொண்டு எதிர்த்துப் பின் கொதித்துச் சங்கரித்துப்
பல் கடித்துச் சென்று உழக்கித் துக்க அசுரோரைக் கழித்து
பண்டு அமர்க்குச் செம் பதத்தைத் தந்து அளித்துக் கைக்கு
அணிக் குச்சம் தரத்து ஐச் சுத்த ஒளிர் வேலா
சிதைத்திட்டு அம்புரத்தைச் சொல் கயத்தைச் சென்று
உரித்துத் தன் சினத் தக்கன் சிரத்தைத் தள் சிவனார்தம்
செவிக்குச் செம் பொருள் கற்கப் புகட்டிச் செம் பரத்தில் செய்த்
திருச்சிற்றம்பலச் சொக்கப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
எனத் தெற்றிக் கவித்துச் செம் பொ(ன்)னைத் துற்றுக்
குழலார் ... நிறைந்து தோன்றி, மிகுந்த இருளுக்குச் சமமாகிச்
செழிப்புற்று, கொம்பு போல சடையாகப் பின்னப்பட்டு, பொன்னாலாகிய
சடை பில்லையைக் கவித்து, நெருக்கம் கொண்ட கூந்தலை உடைய
விலைமாதர்களின்
பின் கழுத்தைப் பண்புறக் கட்டிச் சிரித்துத் தொங்கலைப்
பற்றிக் கலைத்துச் செம் குணத்தில் பித்து இடு மாதர் பதித்து ...
பின்சென்று, கழுத்தை நன்றாகக் கட்டியும், நகைத்தும், தொங்கும்
ஆடையாகிய முந்தானையைப் பிடித்துக் கலைத்தும், நல்ல குணத்தைப்
பித்து பிடிக்கும்படிச் செய்யும் விலைமாதர்களின் மீது மனத்தை அழுத்தப்
பதித்து,
தம் தனத்து ஒக்கப் பிணித்துப் பண்புறக் கட்டிப் பசப்பிப்
பொன் தரப் பற்றிப் பொருள் மாளப் பறித்துப் பின் துரத்துச்
சொல் கபட்டுப் பெண்களுக்கு இச்சைப் பலித்துப் பின்
கசுத்திப் பட்டு உழல்வேனோ ... தாம் பெற்ற பொருளுக்குத்
தகுந்தவாறு வசப்படுத்தி, நன்றாகக் கட்டிப் பிடித்து இன்முகம் காட்டி
ஏய்த்தும், பொன் தரப் பெற்று அடைந்து, வந்தவருடைய பொருள் வற்றிப்
போகுமளவும் கைப்பற்றி, பின்னர் அவரை விரட்டித் துரத்தும் சொற்களை
உடைய வஞ்சகம் கொண்ட வேசியர்களுக்கு ஆசைப்பட்டு, பின்னர்
வருத்தத்தை அடைந்து திரிவேனோ?
கதித்துக் கொண்டு எதிர்த்துப் பின் கொதித்துச் சங்கரித்துப்
பல் கடித்துச் சென்று உழக்கித் துக்க அசுரோரைக் கழித்து ...
விரைந்து எழுந்து எதிர்த்து, பிறகு கோபம் கொண்டு அழித்து, பற்களைக்
கடித்து சென்று சேனைக்கடலைக் கலக்கி, வேதனையடைந்த அசுரர்களை
ஒழித்து,
பண்டு அமர்க்குச் செம் பதத்தைத் தந்து அளித்துக் கைக்கு
அணிக் குச்சம் தரத்து ஐச் சுத்த ஒளிர் வேலா ... முன் ஒரு நாளில்
தேவர்களுக்குச் செவ்விய பதவியைத் தந்தருளி, கையில் அலங்காரமாக
அணிந்துள்ள குஞ்சம் கட்டிய, அச்சத்தைத் தரும், அழகிய, பரிசுத்தமாக
ஒளி விடும் வேலை ஏந்தியவனே,
சிதைத்திட்டு அம்புரத்தைச் சொல் கயத்தைச் சென்று
உரித்துத் தன் சினத் தக்கன் சிரத்தைத் தள் சிவனார்தம் ...
அழகிய திரிபுரங்களை அழித்திட்டு, புகழ் பெற்ற கயாசுரனாய் வந்த
யானையிடம் சென்று அதன் தோலை உரித்து, தான் என்னும்
அகங்காரம் கொண்ட தக்ஷன் தலையை அறுத்துத் தள்ளிய
சிவபெருமானுடைய
செவிக்குச் செம் பொருள் கற்கப் புகட்டிச் செம் பரத்தில் செய்த்
திருச்சிற்றம்பலச் சொக்கப் பெருமாளே. ... திருச்செவிக்குள்
பிரணவப் பொருளை அவர் கற்கும்படி புகட்டி, செவ்விய மேலான
வகையில் அமைந்த திருச் சிற்றம்பலத்தில் (சிதம்பரத்தில்)
எழுந்தருளியிருக்கும் அழகிய பெருமாளே.
1
Similar songs:
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத்
தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான
This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
send corrections and suggestions to admin @ sivaya.org
thiruppugazh song